தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?

1. ஆதுலர் சாலை - ஏழைகளுக்கான தர்ம விடுதி

2. ஓதுவார்க்கு உணவு - படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு

3. அறு சமயத்தார்க்கு உணவ  - அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு

4. பசுக்கு உணவு

5. சிறைச் சோறு - சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு

6. ஐயம் - பிச்சையிடல்

7. திண்பண்டம் வழங்கல்

8. அறவைச் சோறு - அனாதைகளுக்கு உணவளித்தல்

9. மகப்பெறுவித்தல் - பிரசவம் பார்த்தல்

10. மகவு வளர்த்தல் - குழந்தைகள் வளர்த்தல்

11. மகப்பால் வளர்த்தல் - குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்

12. அறவைப் பிணஞ்சுடுதல் - அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்

13. அறவைத் தூரியம் - அனாதைகளுக்கு உடையளித்தல்

14. சுண்ணம் - வெள்ளை கொத்தல்.

15. நோய் மருந்து - வைத்தியம்

16. வண்ணார் - ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்

17. நாவிதர் - ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்

18. கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி

19. காதோலை

20. கண் வைத்தியம்

21. தலைக்கெண்ணெய்

22. பெண்போகம் - காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்

23. பிறர் துயர்காத்தல்

24. தண்ணீர்ப் பந்தல்

25. மடம் (சத்திரம்)

26. தடம் ( சாலை அமைத்தல்)

27. சோலை ( கோட்டம் வளர்த்தல்)

28. ஆவுரிஞ்கதறி - பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்

29. விலங்கிற்கு உணவு - சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்

30. ஏறுவிடுதல் - நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய்       விடுதல்

31. விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்

32. கன்னிகாதானம் - கல்யாணம் செய்து வைத்தல்.