பைபிள் சொல்லும் கருத்துக்கள்...



  • சகிப்புத்தன்மை உள்ளவர்களே சந்தோஷமாய் இருக்கிறார்கள். ஒருவன் இயேசு கிறிஸ்துவின் நல்ல கரத்தைப் போல் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
  • மனிதன் தன் சக்தியை நம்ப வேண்டும். எனக்குப் புறாவைப் போல சிறகுகள் இருந்தால் பறந்து போய் இளைப்பாறுவேனே என எண்ண வேண்டும்.
  • செய்யக்கூடாதவை சில. விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே.
  • நீ செய்யக்கூடிய செயல் உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
  • சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை தரும். ஆனால், ஒவ்வொரு முட்டாளும் ஏதாவது ஒரு சண்டையில் தலையிட்டுக் கொண்டே இருப்பான்.
  • சஞ்சலம் உள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல் இருக்கிறான். அப்படி அல்லாமல் நிலையான மனம் வேண்டும்.
  • நியாயப் பிரமாணம் என்பது நேர்மையானவனுக்கு வகுக்கப்பட்டதல்ல. அநீதி உடையவர்களுக்கும், அடங்காத்தனம் கொண்டவர்களுக்கும், தெய்வ பயமில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், புனிதமற்றோர்களுக்கும், அக்கிரமக்காரர்களுக்கும், தாய்,தந்தையைக் கொலை செய்தவர்களுக்கும், மனிதர்களை வேட்டையாடுபவர்களுக்கும், காமாந்தகாரர்களுக்கும், தகாத கலவியில் ஈடுபடுபவர்களுக்கும், பொய்யர்களுக்கும், குரோதக்காரர்களுக்கும் மட்டுமே வகுக்கப்பட்டு உள்ளது.
  • ஒருவன் நீதிமானாக இருந்தாலும் அவருக்கும் ஒருநாள் கேடு வரும். ஏனெனில் சுமக்க முடியாத துயரமான சுமைகளை சக மனிதர்கள் மீது அவன் சுமத்தி விடுகிறான். தன் விரலால் கூட கஷ்டமான காரியங்களை தொட்டுப் பார்ப்பதில்லை. கஷ்டத்தை எதிர்கொள்பவன்தான் வாழ்வில் வெற்றி அடைகிறான்.
  • இயேசுவான நான் சத்தியத்திற்கு சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் எவனும் என் குரலுக்கு காது கொடுக்கிறான்.
  • ஒரு மனிதனுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. அவனது சத்ருக்கள் அவனுடைய வீட்டில் இருப்பவர்கள்தான்.