திசைகள்... செயல்கள்... பலன்கள்..!

சித்தர்களின் ஆய்வுகளின் தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கும், நவீன அறிவியலுக்கும் இருக்கிறது.

அந்த வகையில் தேரையரின் ஒரு பாடலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

"சாதிக்கும் கீழ்த்திசை சம்பத்துண்டாம்


தவறா தென்கிழ்திசை சஞ்சலமே செய்யும்


ஆதிக்கும் தென்திசை யாயுசு விருத்திக்கும்


ஆகா தென்மெற் திசைக்கு பொருளே சேதம்


வடதிக்கு மேற்திசை மத்திபமே நோயாம்


வடமேற்கு இல்லறம் விட்டதுவே ஓட்டும்


சோதிக்கும் வடதிசை மத்திபமே சாவாம்


சொல்லரிய வடகிழக்கு உத்தமன் தான் பாரே" 

- தேரையர் -

இந்த பாடலில் எட்டு திசைகளைப் பற்றியும் அந்த திசைகளை நோக்கி செய்யப் படும் செயல்களின் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.

அதாவது...

கிழக்கு திசை நோக்கிய செயல்கள் செல்வத்தையும்,


மேற்கு திசை நோக்கிய செயல்கள் உடல் நலிவையும்,


தெற்கு திசை நோக்கிய் செயல்கள் ஆயுள் விருத்தியையும்,


வடக்கு திசை நோக்கிய செயல்கள் மரணம் அல்லது முடிவையும்,


தென் கிழக்கு திசை நோக்கிய செயல்கள் மன சஞ்சலத்தையும்,


தென்மேற்கு திசை நோக்கிய செயல்கள் கையிருப்பு செலவாவதையும்,


வட கிழக்கு திசை நோக்கிய செயல்கள் உத்தமர்களாக்கும்,


வட மேற்கு திசை நோக்கிய செயல்கள் இல்லறத்தை துறக்கும்


என வரையறுத்துக் கூறுகிறார்.

பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைமைகள்,வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கு பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

இந்த தகவல்களை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாமல் இதன் பின்னால் இருக்கும் கூறுகளை ஆராய வேண்டியது நம் கடமை.