ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?




ஸ்ரீமத் பாகவதம் எனும் மகா புராணத்தில் 11 வது ஸ்கந்தத்தில் அவதூத - யது - ஸம்வாதம் என்ற 9 வது அத்தியாயத்தில் 24 வது சுலோகத்தில் 

யதுவம்சோ அவதீர்ணஸ்ய பவக:
புருசோத்தம:
சரஸ்சதம் வ்யதீதாய பஞ்ச 
விம்சாதிகம் ப்ரபோ:

பொருள்: “புருசோத்தமரே! பிரபுவே! யதுவம்சத்தில் அவதரித்த தங்களுக்கு 125 ஆண்டுகள் சென்று விட்டன.

இதில் கூறியிருப்பதன்படி ஸ்ரீ கிருஷ்ணன் பூலோக வாழ்க்கை 125 வருடங்கள். 

மகாபாரதம் ஆதிபர்வம் 115 வது அத்தியாயத்தில் பின் வரும் கால அட்டவணை இருக்கிறது.

திருதராஷ்டிரருடன் அஸ்தினாபுர வாசம் - 13 வருடங்கள்

அரக்கு மாளிகையில் - 1 வருடம்

பாஞ்சால மன்னன் வீட்டில் - 1 வருடம்

ஏகசக்ரபுரத்தில் - 1 வருடம்

மீண்டும் திருதராஷ்டிரனுடன் - 5 வருடங்கள்

இந்திரப்பிரஸ்தத்தில் தனி அரசு - 23 வருடங்கள்

வனவாசமும், அஞ்ஞாதவாசமும் - 13 வருடங்கள்

குருசேத்திர போருக்குப் பின்பு ஆட்சி - 36 வருடங்கள்

இதன் பிறகு பர்சித் மகா சக்கரவர்த்திக்கு பட்டாபிசேகம் செய்து விட்டு மகா பிரஸ்தானம்

இப்படி கணக்கெடுக்கும் போது, மொத்தம் 93 வருடங்கள்.



பாண்டவர்கள் அஸ்தினாபுரம் வந்த பொழுது;

யுதிஷ்டிரன் வயது - 16 வருடங்கள்

பீமன் வயது - 15 வருடங்கள் 

அர்ச்சுணன் வயது - 14 வருடங்கள்

ஸ்ரீ கிருஷ்ணர் வயது அர்ச்சுணனை விட 3 மாதங்கள் அதிகம், தர்மரை விட பதின்மூன்றே கால் வருடம் குறைவு. இந்தக் கணக்குப்படி ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் வாழ்ந்தது 106 வருடங்கள் எனக் கணக்கிடப்படுகிறது.